Sunday, October 15, 2006

புகைப்படம்-2















வலைப் பதிக்க சோம்பலான நேரங்களில் இது போல, என் ஆல்பத்திலுள்ள புகைப்படங்களை ஆட்டை போடலாம் என்றிருக்கிறேன்.

ஆறு வயது ஸ்னேகா...என் மகள்.

புகைப்பட கலையில் ஆர்வம், படம் வரைவதில்லுள்ள சோம்பலுக்கு மாற்று:)

Saturday, May 27, 2006

மதுமிதாவின் பட்டியலில் ஒரு திருஷ்டி

வலைப்பதிவர் பெயர்: மானஸாஜென்

வலைப்பூ பெயர் : 'கூவத்தில் நிலவு', 'வாசகர் வட்டம்'

சுட்டி(url) : http://subramesh.blogspot.com

http://vasagarvattam.blogspot.com

ஊர்: சொந்த ஊர்: வேலூர், வாய வந்த ஊர்: சிங்கை

நாடு: சிங்கப்பூர்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: 'மரத்தடி' தோஸ்துங்கதான், கெட்டப் பயக்கங்க அல்லாத்தியும் அவங்கத்தான் சொல்லிப் பூட்டாங்க ! ர்ர்ர்ரொம்ம்ம்பக் கெட்டப் பஸங்க!

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :01/05/2005

இது எத்தனையாவது பதிவு: எய்தினதை சொல்றீங்களா, எய்திக் கிழிச்சதயா?

இப்பதிவின் சுட்டி(url): http://subramesh.blogspot.com/2006/05/blog-post_27.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: 'பூ', பூத்துகினு காய் வருங்கோ, க்காய் காய்ச்ச்சிகினு பழமாயி அப்பாலிக்கா ந்நெற்ற்ய வெதங்களைத் தர்றும்ன்னு ஒரு பாயாப் போன நெனப்புலத்தானுங்கோ.

சந்தித்த அனுபவங்கள்: அனுபவமா? அப்ப்டின்னா யென்னா கண்ணூ?

பெற்ற நண்பர்கள்: உலகம்பூரா முச்சூடும் கீறாங்க யென்னான்னு சொல்லிக்கிறது? அக்காங்!

கற்றவை: புச்சு புச்சா யென்னான்னவோ புள்ளிங்க செய்யுதுங்க, சொல்லிக்கிணுகீதுங்க, நா யென்னாத்தைக் கண்டுக்கினேன்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: படா சோக்குதான் மாமே, பக்கா சரக்கே விட படா கிக்குதான்...ஆனா நாம யென்னா பாலிடிக்ஸு பேசிக்கினுகீறவனா, அண்ணாத்தீங்கள்ளாம் படா சோக்கான விசியங்களைப் பேசிக்கினு கீறாங்களா நமுக்கு வாயெத்தொறந்தாலே பயமாகீது.

இனி செய்ய நினைப்பவை: இப்ப செய்ஞ்சினுகீறதேதான், டக்கர்ர்ரா பிளேடு போட்ட்றவனை, 'வாத்யாரே நீ பெர்ய வித்தக்காரன்யான்னு சொல்றது.' அப்பப்ப நம்ம வலிப்பையும் வலிச்சிக் காட்றது. புச்சா புள்ளிங்க வந்து சாலாக்கா நின்னா , அய்ய இத கய்தே கூச்சப் படாதே, வந்து தொய்லக் கத்துக்கண்ணு ஓயாம கூவிக்கினுகீறது. அய்ய இத்த, வேறா யென்ணா தெரியும் என்க்கு?

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எதுக்க்கு இது எல்லாம், ரொம்ம தமாசாகீது, என்க்கு கூச்சிமாக்கீது, பெரிய தொர்ற்றமாருங்க மண்டியப் போட்டப் பின்னாடி டீ.வி'லத்தான் இப்டிக் கேட்டிகிணு கிடப்பாங்க.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வற்ட்டுமா, டாஸ்மார்க் தீந்துப் போயிடுச்சி, ஷ்ட்டரை வல்சிட்டானா, ராவுக்கு பேஜாராப் பூடும்.
.

காலத்தின் வேறொரு புள்ளியில் மீண்டும்



நண்பர்களே! நானும் வலைப் பதிக்க வந்தேன்னுதான் பேரு...

@ ஒரு இடத்தில பிரசுரமானதை இன்னுரு இடத்தில போடக்கூடாது (இந்த 'ஈ-போஸ்ட்டர்' ஒட்டற வேலையெல்லாம் நமக்கு ஆகாது), மேம்போக்கான விஷயங்களை எழுதறதை விட, தமிழ் தொலைக்காட்சித் தொடரின் 1542வது எபிஸோடுல மானாவரியா பிலாக்கானம் வைக்கிறதை பார்த்துத் தொலைக்கலாம், யாரோட தற்கொலைக்கு கூட்டுக் கலவி காரணம்ன்னு கிசுகிசு எழுதறதுக்கு பதிலா நம்மோட கண்ராவி பாடதிட்டதில எம்.ஏ தமிழையே படிச்சித் தொலைக்கலாம்...அப்படி இப்படின்னு ஏகப்பட்ட உதார் விட்டதில இரண்டு மூனு பதிவுக்கு பின்னர் வலைமனை இந்தியக் கோர்ட்களில் நிலுவையிலிருக்கும் சிவில் வழக்குகள் போல கிடப்பில் கிடக்க நேர்ந்து விட்டது.

சமீபத்தில எடுத்த என் மகள் சஞ்சனாவின் புகைப்படத்துடன் மறுபடியும் பிரவேசித்திருக்கிறேன். (என்ன பிரவேசமோ?! உனக்குதான் வெளிச்சம்ன்னு சொல்லறது காதில விழுது.)

மறு மொழியுங்கள் நண்பர்களே...