Sunday, May 01, 2005

அடர்வெளி
வன மலர்கள்
மலர்ச்சியின்
உச்சத்தில்
ஆனந்தக்
கவிதையென
சுகந்தத்தை பரவவிட்டு
அருவியில்
விரவி மறையும்...
தண்டுகள்
நறுக்கப்பட்டு
இருட்டறை ஜாடிகளில்
மௌனமாய்
மரித்தபடி
ஏனயன.
@

2 comments:

Thangamani said...

நல்ல கவிதை!

Sri Rangan said...

கவிதை மனது மலர்களுக்காகவும் அழுமென்பது உண்மைதாம்.